Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM
கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் மெட்ரோ ரயில் சிறப்பான முறையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொச்சி மெட்ரோவில் அதிக அளவில் பயணிகளை கவரும் விதமாக சைக்கிள்களை பயணிகள் ரயிலிலேயே இலவசமாக எடுத்துச் செல்லலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.கொச்சியில் அதிக அளவில் சைக்கிள்கள் பயன்பாட்டில் இருப்பதை உணர்ந்து இந்த முடிைவை கொச்சி மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ளது. தற்போது கொச்சியின் செங்கம்புழா பார்க், பளரிவட்டம், டவுன் ஹால், எர்ணாகுளம் சவுத், மகாராஜா கல்லூரி, எர்ணாகுளம் ரயில் நிலையங்களில் சைக்கிள்களை பயணிகள் எடுத்துச் செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பயணிகளிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து இந்தத் திட்டத்தை மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களிலும் அமல்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று கொச்சி மெட்ரோ கூடுதல் தலைமைச் செயலர் அல்கேஷ் குமார் சர்மா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT