Published : 30 Oct 2020 03:12 AM
Last Updated : 30 Oct 2020 03:12 AM

ராணுவத்தை காங்கிரஸார் கிண்டல் செய்தனர் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாஜக தலைவர் ஜே.பி. நட்டா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீரில் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் சென்று தாக்குதல் நடத்தின. அப்போது நமது ராணுவ வீரர்களையும் அவர்களின் வீரத்தையும் காங்கிரஸ் கட்சியினர் கிண்டல் செய்தனர்.

ஆனால் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப் பட்டபோது இந்தியா தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் பயந்ததாக தற்போது பாகிஸ்தான் எம்.பி.யே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இதற்கு பயந்துதான் அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்திய ராணுவத்தின் வலிமை உலகம் முழுவதும் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் எம்.பி. கூறியதிலிருந்து காங்கிரஸ் தனது கருத்துகளை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x