Published : 06 Apr 2021 03:14 AM
Last Updated : 06 Apr 2021 03:14 AM
சென்னை அண்ணா சாலையில் தேர் தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத் திய சோதனையில், ஒரு வாகனத்தில் 450 கிலோ தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவ ணங்கள் இருந்ததால், அவை திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தை வழி மறித்து சோதனை செய்தபோது, அதில் 450 கிலோ தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது. நகைகளுக்கு பாதுகாப்பாக துப்பாக்கி ஏந்திய தனியார் செக்யூரிட்டி நபர்கள் இருவரும் அதில் இருந்தனர். அந்த வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, சென்னை தி.நகரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் இருந்து சவுகார்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கடைகளுக்கு இந்த நகைகளை கொண்டு செல்வது தெரியவந்தது. மேலும், அந்த நகைகளுக்கான ஆவணங்களும் அவர்களிடம் இருந்தன.
நகைகள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவை அனைத்தும் சரியாக இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து 450 கிலோ நகைகளையும் அவர்களிடமே அதிகாரிகள் ஒப் படைத்தனர்.
மேலும் அண்ணா சாலையில் 4 இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.46 லட்சத்தை 3 பேரிடம் இருந்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவை தேர்தல் நடத்தும் அதிகாரி களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதேநேரம் தமிழகத்தில் இதுவரை ரூ.428 கோடி மதிப்பு ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT