Published : 31 Jan 2021 03:13 AM
Last Updated : 31 Jan 2021 03:13 AM

வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சினைகளை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்போம் அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் எழுப்பிய பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அரசு விரும்பு கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து நடைபெற்ற நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். பிரதமர் பேசியது தொடர்பாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகாத்மா காந்தியின் நினைவு நாளான இன்று அவரது கனவுகளை நனவாக்க நாம் பாடுபடவேண்டும் என்றும் இந்த நாளில் அமெரிக்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை இன்று காலை அவமதிக் கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு கண் டனம் தெரிவிக்கிறேன் என்றும் இதுபோன்ற வெறுப்பு மிகுந்த சூழல் நமது கிரகத்தில் வரவேற்புக்குரியது அல்ல என்றும் பிரதமர் மோடி கூட்டத்தில் தெரிவித்தார்.

புதிய வேளாண் சட்டங்கள் குறித்த பிரச்சினையை அரசு திறந்த மனதுடன் அணுகி வருகிறது. கடந்த 22-ம் தேதி அரசு கொண்டிருந்த நிலைப்பாடு தான் தற்போதும் நீடிக்கிறது. வேளாண் அமைச் சர் வழங்கிய திட்ட முன்மொழிவும் நீடிக் கிறது. பேச்சுவார்த்தைகளை முன்னெடுத் துச் செல்வதற்கு வேளாண் அமைச்ச ருக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் போதும் என்றும் பிரதமர் அப்போது தெரிவித்தார். வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் எழுப்பிய பிரச்சினைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது.

கடந்த ஜனவரி 26-ம் தேதி நிகழ்ந்த விவசாயிகளின் பேரணியின்போது துர திருஷ்டவசமான சம்பவங்கள் நடந்தன. இந்த விவகாரத்தில் சட்டம் தனது கட மையை செய்யும். கூட்டத்தில் தலைவர் கள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து, விரிவான விவாதத்துக்கு அரசு தயாராக உள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் சுமூகமாக நடைபெற வேண்டும். அவையில் விரிவான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்றால் அதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பும் முக்கியம்.

இடையூறுகள் இல்லாமல், நாடாளு மன்றம் சுமூகமாக நடைபெறுவதை பெரிய கட்சிகள் உறுதி செய்ய வேண்டும். இதன்மூலம் சிறிய கட்சிகள் தங்களது கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன் வைக்க ஏதுவாக இருக்கும் என்றும் பிரதமர் அப்போது கேட்டுக்கொண்டார். இவ்வாறு மத்திய அமைச்சர் தோமர் கூறினார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர் பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செய்தியாளர்களிடம் பேசினார். அப் போது அவர் கூறியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரதமருடன் அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது விவசாயிகளின் பிரச்சினையை திறந்த மனத்துடன் ஆலோசனை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி, கட்சித் தலைவர்களிடம் உறுதி அளித்தார். அதேநேரத்தில் வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் கடந்த 22-ம் தேதி மத்திய அரசு கொண்டிருந்த நிலைப்பாடுதான் தற்போதும் நீடிக்கிறது. வேளாண் அமைச்சர் வழங்கிய திட்ட முன்மொழிவு தற்போதும் நீடிக்கிறது என் றும் பிரதமர் அப்போது எடுத்துரைத்தார்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவ சாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றும் அதுதொடர்பாக திறந்த மனத்துடன் ஆலோசனை நடத்த அரசு எப்போதும் தயாராக உள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், திரிணமூல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாயா, சிரோண்மணி அகாலி தளத்தின் பல்விந்தர் சிங் புந்தர், சிவசேனாவின் விநாயக் ரவுத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x