Published : 28 Nov 2020 03:16 AM
Last Updated : 28 Nov 2020 03:16 AM
‘நிவர்’ புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ‘நிவர்’ புயலால் உயிரிழந்த 4 பேர் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்றிரவு 9 மணி அளவில் முதல்வர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, ‘நிவர்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தேவையான உதவிகளை செய்வதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT