Published : 06 Nov 2020 03:16 AM
Last Updated : 06 Nov 2020 03:16 AM

தமிழகத்தில்2 நாட்களுக்குமழை வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங் களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும், ஒருசில மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக நவ.6-ம் தேதி (இன்று) தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழையும், இதர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.

நாளை தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சா வூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் இடியுடன் கன மழையும், இதர மாவட்டங்களில் பெரும் பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும்.

5-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் தாரா புரத்தில் 17 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x