Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

மின்சார ரயில்களை இயக்கவும் திரையரங்குகள் செயல்படவும் அனுமதி நவ.16-ல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை

தமிழகத்தில் நவம்பர் 16 முதல் 9-ம் வகுப்புக்கு மேல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படலாம் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். நவம்பர் 10 முதல் 50 சதவீத இருக்கை களுடன் திரையரங்குகளை திறக்கவும் புறநகர் மின்சார ரயில்களை இயக் கவும் அனுமதிக்கப்படுவதாக முதல் வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. அடுத்தடுத்து தளர்வு களுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வரு கிறது. 9-ம் கட்டமாக அக்டோபர் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அடுத்தகட்ட ஊர டங்கு நீட்டிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் கடந்த 28-ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, 10-ம் கட்டமாக இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் நேற்று வெளி யிட்ட அறிக்கை:

தமிழகத்தின் அனைத்து மாவட்டங் களிலும் நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அரசின் சிறப்பான செயல்பாடுகளா லும், பொதுமக்களின் ஒத்துழைப்பா லும்தான் நோய்த் தொற்று கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது அமலில் உள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வுகளு டன் நவம்பர் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. பொருளாதார மீட்பின் அவசியம், நோய்த் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வு களுடன் கீழ்க்காணும் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

l 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நவம்பர் 16 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்கலாம்.

l பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பணியாளர் விடுதிகள் உட்பட அனைத்து விடுதிகளும் நவ.16 முதல் செயல்படலாம்.

l கோயம்பேடு வணிக வளாகத்தில் பழக்கடை மொத்த வியாபாரக் கடைகள் நவ.2-ல் இருந்தும், பழம் மற்றும் காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் 3 கட்டங்களாக நவ.16-ல் இருந்தும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

l பொதுமக்களுக்கான புறநகர் மின்சார ரயில் சேவை, மத்திய அரசின் முடிவுக்கு ஏற்ப நெறிமுறைகள் பின்பற்றி செயல்படலாம்.

l சின்னத்திரை உட்பட திரைப்பட படப்பிடிப்புகளில் ஒரே நேரத்தில் 150 பேருக்கு மிகாமல் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

l திரையரங்கு உரிமையாளர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளுடன் நவ.10 முதல் செயல்படலாம்.

l மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச் சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் கூட்டங்கள் நவ.16 முதல், 100 பேர் பங்கேற் கும் வகையில் நடத்த அனுமதிக் கப்படுகிறது.

l பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்கு கள், உயிரியல் பூங்காக்கள், அருங் காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள் வழிகாட்டு நெறிமுறைகளுடன் நவ.10 முதல் செயல்படலாம்.

l திருமண நிகழ்வுகள், இறுதி ஊர்வலங்களில் 100 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்கலாம்.

l ஏற்கெனவே 50 வயது மற்றும் அதற்கு குறைவானவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் 60 மற்றும் அதற்கு குறைவான வயதுடையவர்களுடன் உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

பொதுவான தடைகள்

l தமிழகம் முழுவதும், நோய் கட்டுப் பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எவ்வித தளர்வுகள் இன்றி ஊரடங்கு முழுமை யாக கடைபிடிக்கப்படும்.

l நீச்சல் குளங்கள், கடற்கரை, சுற்று லாத் தலங்கள் போன்ற பொதுமக் கள் கூடும் இடங்களுக்கு அடுத்த உத்தரவு வரும்வரை தடை நீடிக் கிறது.

l மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்கள் தவிர சர்வதேச விமான போக்குவரத் துக்கான தடை நீடிக்கிறது.

l புதுச்சேரி தவிர வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு செல்பவர்களுக்கும் தற்போதுள்ள இ-பதிவு முறை தொடரும்.

விழிப்புணர்வு தேவை

தமிழகத்தில் கரோனா பரவல் குறைந்துவரும் சூழல் நீடிக்கவும், முழுமையாக தடுக்கவும் நாம் அனை வரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் பண்டிகை காலங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தேவையின்றி வெளி யில் செல்வதை தவிர்த்தல் ஆகிய வற்றை கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தால்தான் நோய்ப் பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும்.

நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு, எஞ்சியுள்ள கட்டுப்பாடுகளுக்கும் தேவைக்கேற்ப தளர்வுகள் வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாற்றம்

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. அதன்பின், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கடந்த மே 17-ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி, காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை கடைகள் இயங்கி வந்தன.

இந்நிலையில், இன்று முதல் கடை திறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஊரடங்குக்கு முன்பு இருந்தபடி பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) நிர்வாகம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x