Published : 12 Nov 2021 03:14 AM
Last Updated : 12 Nov 2021 03:14 AM

மழை வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 60 படகுகள் அனுப்பிவைப்பு :

மீட்புப் பணிகளில் ஈடுபட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 60 படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நேற்றும் தொடர்ந்து மழை பெய்ததால், மழைநீர் வடியாமல் சூழ்ந்து உள்ளது. சென்னையில் மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழையினால் பல்வேறு இடங்களில்தண்ணீர் தேங்கியுள்ளது. அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம்மழைநீரை அப்புறப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட சென்னையில் இருந்து 60படகுகள் அனுப்பி வைக்கப்பட் டுள்ளன.

இதுதொடர்பாக, மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

தாழ்வான பகுதிகளில் சிக்கியுள்ள மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை மீட்பதற்காக சென்னையில் இருந்து மீனவர்களுடன் படகுகளை அனுப்பி வருகிறோம். இதன்படி, சென்னையில் சோழிங்கநல்லூர், கோட்டூர்புரம், செம்மஞ்சேரி, நொச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு படகுகள் அனுப்பி வைக்கப்பட் டுள்ளன.

மீனவர்களுடன் படகுகள் தயார்

இதுதவிர, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் மீட்பு பணியில் ஈடுபட படகுகளை தொடர்ந்து அனுப்பி வருகிறோம். இதுவரை மீனவர்களுடன் மீட்பு பணியில் ஈடுபட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 60 படகுகளை அனுப்பிவைத்துள்ளோம். மீனவர்களை படகுகளுடன் தயார் நிலையில்வைத்துள்ளோம். மீட்புப் பணிக்குஎத்தனை படகுகள் தேவைப்பட்டாலும் அனுப்புவதற்கு தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x