Published : 10 Nov 2021 03:06 AM
Last Updated : 10 Nov 2021 03:06 AM
சென்னையில் ஏற்பட்டுள்ள மழை,வெள்ள பாதிப்புகளை ஒரு வாரத்துக்குள் சரி செய்யாவிட்டால் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கும் என சென்னை மாநகராட்சியை தலைமை நீதிபதி அமர்வு எச்சரித்துள்ளது.
சென்னையில் உள்ள குறுகிய சாலைகளின் அகலத்தை அதிகப்படுத்துவதற்கும், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப்பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், ‘‘கடந்த 2015-ம்ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புக்குப் பிறகு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல கோடி மதிப்பில் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும்,தற்போது மழைநீர் செல்ல வழியின்றி சென்னை தத்தளிக்கிறது.
2015-ம் ஆண்டு வெள்ள பாதிப்புக்குப் பிறகு சென்னை மாநகராட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது’’ என கேள்வி எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து, ‘‘சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஒரு வாரத்துக்குள் சரிசெய்யாவிட்டால் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கும்’’ என எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT