Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 03:06 AM
தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தட திட்ட இயக்குநராக பா.கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2002-ல் குடிமையியல் பணியில் தேர்ச்சி பெற்ற கிருஷ்ணமூர்த்தி, இந்திய ஆயுத தொழிற்சாலைகளுக்கான சேவைகளுக்கு பணி நியமனம் செய்யப்பட்டவர். ஆயுத தொழிற்சாலை வாரியத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ள கிருஷ்ணமூர்த்தி, தமிழகத்தில் ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை, அரவங்காடு கார்டைட் தொழிற்சாலை, இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆயுத தொழிற்சாலை வாரியம் ஆகியவற்றில் இயக்குநராக பணியாற்றியவர். ஆயுத தொழிற்சாலை வாரியத்தில் ஆயுத்பூஷண் விருது பெற்றவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT