Published : 29 Oct 2021 03:09 AM
Last Updated : 29 Oct 2021 03:09 AM
கோயில் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்ய அறநிலையத் துறை ஆணையருக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்36 ஆயிரத்துக்கும் மேற்பட்டகோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
விதியில் திருத்தம்
இந்து சமய அறநிறுவனங்களின் ஊழியர்களுக்கான விதியில், கோயிலில் பணியாற்றும் ஊழியர்களை பணியிடமாற்றம் செய்ய முடியாத சூழல் இருந்து வந்தது. இந்நிலையில், கோயிலில் பணியாற்றும் ஊழியர்களை அறநிலையத் துறை ஆணையர், நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யலாம் என்று விதியில் திருத்தம்செய்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT