Published : 29 Aug 2021 03:12 AM
Last Updated : 29 Aug 2021 03:12 AM

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் - இறுதி சுற்றுக்கு முன்னேறி பவினாபென் படேல் சாதனை :

டோக்கியோ

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் பவினாபென் படேல்.

ஜப்பானின் டோக்கியோ நகரில்நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் நேற்று மகளிருக்கான டேபிள்டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவு அரை இறுதி சுற்றில் பவினாபென் படேல், சீனாவின் ஜாங் மியாவோவை எதிர்த்து விளையாடினார். இதில் 34 வயதான பவினாபென் படேல்,உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜாங் மியாவோவை 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் டேபிள் டென்னிஸில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார் பவினாபென் படேல்.

இன்று நடைபெறும் தங்கப் பதக்கத்துக்கான இறுதிச் சுற்றில் பவினாபென் படேல், உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளசீனாவின் யிங் ஜாவுடன் மோதுகிறார். பவினாபென் படேல் கூறும்போது, “டோக்கியோ வந்தவுடன் எதை பற்றியும் சிந்திக்காமல் 100 சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் என நினைத்தேன். 100 சதவீத உழைப்பை கொடுத்தால், பதக்கம் வரும். அதைத்தான் நான்நினைத்தேன். எனது நாட்டு மக்களின் ஆசீர்வாதத்துடன் இந்த நம்பிக்கையை நான் தொடர்ந்தால், தங்கம் வெல்வேன் என்று நினைக்கிறேன். இறுதிப் போட்டியிலும் நான் 100 சதவீதம் உழைப்பை கொடுக்க வேண்டும்’’ என்றார்.

பிரதமர் வாழ்த்து

இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள பவினாபென் படேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துதெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘வாழ்த்துகள் பவினாபென் படேல். அருமையாக விளையாடினீர்கள். ஒட்டுமொத்த தேசமும் உங்கள் வெற்றிக்காக நாளை (இன்று) பிரார்த்தனை செய்யும்மற்றும் உங்களுக்கு ஆதரவளிக்கும். அழுத்தம் இல்லாமல் உங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். உங்களுடைய சாதனைகள் ஒட்டுமொத்த தேசத்தையும் ஊக்கமூட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x