Published : 13 Aug 2021 03:15 AM
Last Updated : 13 Aug 2021 03:15 AM

தமிழகத்தில் புதியதாக 1,942 பேருக்கு கரோனா :

தமிழகத்தில் புதியதாக நேற்று 1,942 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று புதியதாக 1,942 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், ஆண்கள் 1,115 பேர்,பெண்கள் 827 பேர். அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 249 பேருக்கும், சென்னையில் 217 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

33 பேர் உயிரிழப்பு

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று மட்டும்33 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால்உயிரிழந்தோர் எண்ணிக்கை34 ஆயிரத்து 428 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x