Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM
மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாயில் இன்றுமுதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘மேட்டூர் அணையின் கிழக்குக்கரை, மேற்குக்கரை கால்வாய் பாசனப் பகுதியில் மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற, மேட்டூர் அணையிலிருந்து ஆகஸ்ட் 1 (இன்று) முதல்டிச.15 வரை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதேபோல், மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களின் கீழுள்ள பாசனப் பகுதிகளுக்கு இன்று (ஆக.1) முதல் டிச.15-ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT