Published : 15 Jul 2021 03:12 AM
Last Updated : 15 Jul 2021 03:12 AM

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை - அக்.10-க்குள் முடிக்க ஏஐசிடிஇ உத்தரவு :

பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை அக்டோபர் 10-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவலால் கல்லூரிகள் திறப்பில் தாமதம்ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட காலஅட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான அங்கீகார இணைப்பை ஆக. 10-க்குள் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். மேலும், பொறியியல் சேர்க்கைக்கான முதல்சுற்றுகலந்தாய்வை செப்.30-க்குள்ளும், 2-ம் சுற்று கலந்தாய்வை அக்.10-க்குள்ளும் நடத்தி முடிக்க வேண்டும். இதில் விடுபட்ட இடங்களுக்கான கலந்தாய்வை அக். 20-க்குள் முடிக்க வேண்டும்.

அதேபோல, நேரடி 2-ம் ஆண்டுசேர்க்கையை அக்.30-க்குள் முடிக்க வேண்டும். 2, 3-ம் ஆண்டுமாணவர்களுக்கு அக்.1-ம் தேதியும், முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்.25-ம் தேதியும் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

கல்லூரிகளில் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் அக். 15-ம் தேதிக்குள் விலகிவிட்டால், முழு கல்விக் கட்டணத்தையும் நிர்வாகம் வழங்க வேண்டும்.

மேலும், அந்தந்தப் பகுதிகளின் நோய்த் தொற்று சூழலுக்கேற்ப கல்லூரிகள், வகுப்புகளை நேரடி யாக அல்லது இணையவழியிலோ நடத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x