Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM

பள்ளி வளாகத்துக்குள் மாணவர்கள், பெற்றோர் செல்லத் தடை :

பள்ளி வளாகத்துக்குள் அவசியமின்றி யாரும் வரக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறும்போது,

‘‘சில அரசுப்பள்ளி மைதானங்களில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளில் மாணவர்கள் ஈடுபடுவதாகவும், தனியார் பள்ளிகள்,கட்டணம் செலுத்த பெற்றோரைநேரில் வரவழைப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. பெற்றோர்களிடம் கல்விக் கட்டணங்களை இணையவழியில் மட்டுமே வசூல்செய்ய வேண்டும்.

பள்ளியினுள் யாராவது அத்துமீறி நுழைந்தால் கிராம நிர்வாகஅலுவலர் மூலம் காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும்.இதில் ஏதேனும் தவறு நடந்தால்அப் பள்ளி தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும்’’என்றனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x