Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி மாணவர்கள் - மறு தேர்வு எழுத ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம் :

பொறியியல் கல்லூரி மாணவர்கள், மறு தேர்வு எழுத ஜூன் 3-ம் தேதிக்கு்ள் விண்ணப்பிக்கலாம் என்று ்அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய பருவத் தேர்வு கரோனாபரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் இணையவழியில் நடத்தப்பட்டது.

தேர்வு முடிவில் குழப்பங்கள்

அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. சுமார் 1 லட்சம் மாணவர்களுக்கான முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்ட தாகவும், நன்றாக படித்த மாணவர்களுக்கு அரியர் என்றும் அதில்தெரிவிக்கப்பட்டதால் கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர்.

இதையடுத்து, பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஏற்கெனவே நடைபெற்ற தேர்வை எழுதிய மாணவர்கள்வேண்டுமானால் மறுதேர்வை எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டது.

விண்ணப்பப் பதிவு தொடக்கம்

இந்நிலையில், மறுதேர்வுக்கான விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. https://annauniv.eduஎன்ற இணையதளத்தில் வரும்ஜூன் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மறுதேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 7010444623 என்ற செல்போன் எண் அல்லது coewp2020@gmail.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x