Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM
தங்கம் விலை நேற்று ஒரேநாளில் பவுனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.34 ஆயிரத்து 672-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச அளவில் பங்குசந்தை மற்றும் ஆன்லைனில் தங்கம் முதலீடு அதிகரித்து வருவதால்தங்கம் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.34 ஆயிரத்து 672-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 334-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 258-க்கு விற்கப்பட்டது.
தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், பெரும்பாலான நகை கடைகளில் மக்கள் கூட்டம் நேற்று குறைவாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT