Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM

பி.ஆர்க். மாணவர் சேர்க்கைக்கான - கல்வித் தகுதியில் தளர்வு : மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு

சென்னை

கரோனா பரவல் காரணமாக, பி.ஆர்க். படிப்புக்கான கல்வித் தகுதியில் மத்திய அரசு தளர்வு அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக பி.ஆர்க். சேர்க்கைக்கு குறைந்தபட்ச மதிப்பெண் அடிப்படையில் மாற்றம் கொண்டுவருவது குறித்துஅகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை செய்து வந்தது. அதன்படி 2021-22 கல்வி ஆண்டுக்கான பி.ஆர்க். சேர்க்கை தகுதியில் தளர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “2021-22 ஆண்டு பி.ஆர்க். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணித பாடத்துடன் தேர்ச்சி பெற்றாலே போதும். இவற்றில் 50 சதவீத மதிப்பெண் பெறத் தேவையில்லை. அதேபோல, 10-ம்வகுப்புக்கு பிறகு 3 ஆண்டுகள் டிப்ளமோ படிப்பு முடித்தவர்களும் தேர்ச்சி பெற்றாலே போதும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x