Published : 03 Mar 2021 03:22 AM
Last Updated : 03 Mar 2021 03:22 AM

தமிழகத்தில் புதிதாக 462 பேருக்கு கரோனா

சென்னை

தமிழகத்தில் புதிதாக 462 பேருக்குகரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தமிழகத்தில் நேற்று ஆண்கள் 284, பெண்கள் 178 என மொத்தம் 462 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 167 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு 8 லட்சத்து 52,478 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனையில் 74 வயதுமூதாட்டி உயிரிழந்தார். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,502 ஆக உயர்ந்துள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x