Published : 22 Feb 2021 03:16 AM
Last Updated : 22 Feb 2021 03:16 AM

தொடரும் பேச்சுவார்த்தை

படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுவது தொடர்பாக தயாரிப்பாளர்கள் - திரையரங்க உரிமையாளர்கள் இடையே தொடர்ந்து கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ‘30 நாட்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிடுவோம் என்ற கடிதம் கொடுத்தால் மட்டுமே திரையரங்குகள் ஒதுக்குவோம்’ என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவுடன் இருக்கின்றனர். இதற்கு தயாரிப்பாளர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக முன்னணி தயாரிப்பாளர்கள் - திரையரங்க உரிமையாளர்கள் இடையே சில நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தயாரிப்பாளர்கள், ‘படத்தை டிஜிட்டல் முறையில் திரையிடுவதற்கான விபிஎஃப் கட்டணத்தை கட்ட முடியாது. 30 நாட்களுக்குப் பிறகுதான் ஓடிடியில் வெளியிடுவோம் என்றெல்லாம் கடிதம் கொடுக்க இயலாது’ என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். இதுதொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் கலந்துபேசி, தங்களது முடிவை அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் தெரிவிக்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையிலும் சுமுக முடிவு ஏற்படாத பட்சத்தில், மீண்டும் ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழ் திரையுலகம் சந்திக்கும் என்று கூறப்படுகிறது. தவிர, விபிஎஃப் கட்டணக் குறைப்பு நடைமுறை என்பது மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். அதன்பிறகு அந்த பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x