Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

துணை மருத்துவ படிப்பு பொதுப் பிரிவு கவுன்சலிங் 10-ம் தேதி தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும்தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம்,அனஸ்தீசியா, கார்டியாக் டெக்னாலஜி உட்பட 17 துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன.

இதில், அரசு கல்லூரிகளில் 1,590 இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13,858 இடங்களும் உள்ளன.

துணை மருத்துவப்படிப்பு கவுன்சலிங் வரும் 9-ம் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது. முதல் நாளில், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு கவுன்சலிங் நடக்கிறது. தொடர்ந்து 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கவுன்சலிங் நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x