Published : 27 Jan 2021 03:17 AM
Last Updated : 27 Jan 2021 03:17 AM
நடப்பு ஆண்டில் 10, 12-ம் வகுப்புபொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு சாரணர் இயக்குநரகத்தின் தலைமையகத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தேசியக் கொடிஏற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நடப்பு கல்வியாண்டில் 10, 12-ம்வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு குறைந்த காலத்தில்தயாராக வேண்டிய சூழல் நிலவுகிறது. இதை கருத்தில்கொண்டு பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம் செய்வது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
வினாத்தாள் வடிவமைப்பை எளிமையாக்கலாமா அல்லது எந்தமாதிரியான மாற்றங்களை செய்யலாம் என்பது குறித்து பெற்றோர்,ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. அவை பெறப்பட்டவுடன் முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT