Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM
சரியான முறையில் அப்புறப்படுத்தாததால் கடலின் ஆழப் பகுதியில் பயனற்ற முகக் கவசங்கள் பரவிக் கிடப்பதாக புதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிநடத்தி வருபவர் அரவிந்த். புதுச்சேரியைச் சேர்ந்த இவர், கரோனாகாலத்தில் ஆழ்கடலில் சென்றபோது கடல் தூய்மையாக இருந்ததாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
அப்போது மக்கள் நடமாட்டம் இன்றியும், பயனற்ற பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இன்றி கடலின் ஆழப் பகுதியில் சுத்தமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அவர் குறிப்பிட்டிருந்தார்.
அண்மையில் புயல், தொடர்மழை காரணமாக ஆழ்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டறிய சென்றார். அப்போது ஆழ்கடலில் பல பகுதிகளில் முகக் கவசங்கள் பரவிக் கிடப்பதாக தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆழ்கடலில் எடுத்துள்ள சில புகைப்படங்களை வெளியிட்டு, கூறும்போது, “பொதுமக்கள் பயன்படுத்திய முகக் கவசங்களை முறையாக அப்புறப்படுத்தாமல் தூக்கி வீசியதால் அவைமழைநீரில் கலந்து கால்வாய் வழியாக கடலுக்குள் வந்துள்ளன. கடலின் ஆழப் பகுதியில் பயனற்றமுகக் கவசங்கள் பரவலாகக்கிடப்பதைப் பார்த்தேன்.
பிளாஸ்டிக் பொருட்களைவிட முகக் கவசங்கள் அதிகமாகஇருந்தன. அதில் ஏராளமானவற்றை கையோடு எடுத்து வந்தேன். முழுமையாக தூய்மைப்படுத்த முடியவில்லை. கடலை மாசுப்படுத்தாமல் இருக்க மக்கள் முகக் கவசத்தை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக புதுச்சேரியில் இருந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் அதிக அளவில் முகக் கவசங்கள் காணப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT