Published : 02 Jan 2021 03:23 AM
Last Updated : 02 Jan 2021 03:23 AM

தமிழகத்தில் புதிதாக 921 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று

தமிழகத்தில் புதிதாக 921 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 573, பெண்கள் 348 என மொத்தம் 921 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 252 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 18,935 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 2 லட்சத்து 19,216 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 98,420 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 334 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,029 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 2,528 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8,380 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

13 பேர் உயிரிழப்பு

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 8 பேர், தனியார் மருத்துவமனைகளில் 5 பேர் என நேற்று 13 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,135 ஆகஉயர்ந்துள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டலில் 70 பேருக்கு தொற்று

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஊழியர்கள், தங்கியுள்ளவர்கள் என 70-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அந்த ஓட்டலில் தொற்று எப்படி உருவாகியது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x