Published : 14 Dec 2020 03:14 AM
Last Updated : 14 Dec 2020 03:14 AM

4 ஆயிரம் செவிலியருக்கு பணி நிரந்தரம் ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக அரசு மருத்துவமனைகளில் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வரும் 4 ஆயிரம் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4 ஆயிரம் பேருக்குத் தற்காலிக பணிக்காலம் நிறைவடைய உள்ளது.

கரோனா வைரஸ் தொற்று அபாயம் முழுமையாக நீங்காத நிலையில், செவிலியர்களின் சேவை, மருத்துவத் துறைக்கும் மக்களுக்கும் தேவை என்பதால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x