Published : 03 Dec 2020 03:14 AM
Last Updated : 03 Dec 2020 03:14 AM

தங்கம் பவுனுக்கு ரூ.680 உயர்ந்தது

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 888-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.36 ஆயிரத்து 888-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 611-க்கு விற்பனை ஆனது. இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 526-க்கு விற்கப்பட்டது. தங்கத்தின் விலை குறைவால் கடந்த சில நாட்களாக அதிகரித்து இருந்த வாடிக்கையாளர் கூட்டம் நேற்று குறைவாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x