Published : 21 Nov 2020 03:15 AM
Last Updated : 21 Nov 2020 03:15 AM
ஹரியாணாவில் வீடு இன்றி தவிக்கும் 200 தமிழர் குடும்பங்களுக்கு தேவையான குடியிருப்பு வசதிகளை செய்து தருமாறு அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள மகேஷ்புர் கிராமம், செக்டார் 21-ல் உள்ள தமிழ் காலனியில் வசிக்கும் 200 தமிழர் குடும்பங்களிடம் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை கடிதம் வந்திருந்தது. அதில், அவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் வசித்து வருவதாகவும், தற்போது அவர்களுக்கு மாற்று இடம் அல்லதுகுடியிருக்க வீடுகூட தராமல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT