Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

நெல்லை, தென்காசி ஆட்சியர்கள் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் தமிழக அரசு உத்தரவு

திருநெல்வேலி, தென்காசி, ராணிப்பேட்டை ஆட்சியர்கள் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளியிட்ட அறிவிப்பு:

மீன்வளத் துறை இயக்குநர் எஸ்.சமீரன், தென்காசி மாவட்ட ஆட்சியராகவும், தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் வி.விஷ்ணு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராகவும், சென்னை பெருநகர மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு இணை ஆணையர் பி.மதுசூதன் ரெட்டி,சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும், அயல்நாடு, மாநிலம் வாழ்தமிழர்கள் மறுவாழ்வு இயக்குநர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகவும், சுகாதாரத் துறை இணை செயலர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராகவும், தேசிய சுகாதார இயக்கதிட்ட இயக்குநர் கே.செந்தில்ராஜ்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் மீன்வளத் துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ராமநாதபுரம் ஆட்சியராக இருந்த கே.வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவு இயக்குநராகவும், தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறைஇணை செயலராகவும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுகாதாரத் துறைஇணை செயலராகவும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, மின் ஆளுமை, பொதுமக்கள் குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாகவும், அயல் பணியாக வந்துள்ள ஜெசிந்தா லாசரஸ், அயல்நாடு, மாநில வாழ் தமிழர்கள் மறுவாழ்வு இயக்குநராகவும், எஸ்.திவ்யதர்ஷினி சென்னை பெருநகர மாநகராட்சி சுகாதாரப் பிரிவு இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x