Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM
அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்களும் இலவச நீட் பயிற்சி வகுப்பில் சேரலாம் என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நீட் தேர்வில் தொடர்ச்சியாக 2, 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றமாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர். இதன்காரணமாக ஏற்கெனவே பயிற்சிபெற்ற அரசுப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்களுக்கும் மீண்டும் பயிற்சி வழங்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு நீட் பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்யலாம். அவர்களுக்கு நீட் தேர்வுக்கு முந்தைய வாரம் வரை இணைய வழியில் பயிற்சிகள் வழங்கப்படும். ஒவ்வொருவார இறுதியிலும் குறுந்தேர்வுகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT