Published : 09 Nov 2020 03:11 AM
Last Updated : 09 Nov 2020 03:11 AM

தமிழகத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் 7.13 லட்சமாக உயர்வு சிகிச்சையில் இருப்போர் 18,894 பேர்

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றில் இருந்து 7.13 லட்சம் பேர் குணமடைந்தனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 18,894 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னையில் 601 பேர்

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,410, பெண்கள் 924 எனமொத்தம் 2,334 பேர் கரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 601, கோவையில் 205பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 43,822 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை சென்னையில் 1 லட்சத்து 95,291 பேர் உட்படதமிழகம் முழுவதும் 7 லட்சத்து13,584 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 675 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2,386 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். சென்னையில் 5,855 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 18,894 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 11 பேர், தனியார் மருத்துவமனைகளில் 9 பேர் என நேற்று 20 பேர்உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 5 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,344 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,716 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 4,862,கோவையில் 45,094, செங்கல்பட்டில் 44,849, திருவள்ளூரில் 38,893என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது.

206 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 5 லட்சத்து 61,722 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 75,384 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட 26,415 குழந்தைகள், 13 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 லட்சத்து 24,597மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 92,810 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 206 அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 5 லட்சத்து 61,722 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 75,384 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x