Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால், நீலகிரி, தேனி மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது,
‘‘குமரிக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக நவ.7-ம் தேதி (இன்று) நீலகிரி, தேனி மாவட்ட மலைப் பகுதி,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.
8-ம் தேதி தென் தமிழக கடலோரமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT