Published : 06 Nov 2020 03:16 AM
Last Updated : 06 Nov 2020 03:16 AM

தமிழகத்தில் புதிதாக 2,348 பேருக்கு தொற்று

தமிழகத்தில் புதிதாக 2,348 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,455, பெண்கள் 893 என மொத்தம் 2,348 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 621,கோவையில் 238, திருவள்ளூரில் 148, சேலம் 130, செங்கல்பட்டில் 112, திருப்பூர் 110, காஞ்சியில் 102பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் இளைஞர்கள் உட்பட 14 பேர், தனியார் மருத்துவமனைகளில் 14 பேர் என நேற்று 28 பேர் உயிரிழந்தனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதிக்கு காய்ச்சல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x