Published : 05 Nov 2020 03:12 AM
Last Updated : 05 Nov 2020 03:12 AM

3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் 3 பேருக்கு புதிய பணி

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பியுள்ள 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பணி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலர் க.சண்முகம் நேற்று வெளியிட்ட உத்தரவு:

முதல்வர் சிறப்பு பிரிவு தனி அதிகாரி டி.பாஸ்கர பாண்டியன் இடமாற்றம் செய்யப்பட்டு, செய்திமற்றும் மக்கள்தொடர்புத் துறைஇயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அரசு கேபிள் டிவி கழகத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும் கவனிப்பார்.

கனிமவள இயக்குநரும், டாமின்நிறுவன மேலாண்மை இயக்குநருமான (பொறுப்பு) இ.சரவண வேல்ராஜ் மாற்றப்பட்டு, முதல்வர் சிறப்பு பிரிவு தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவுசங்கங்களின் பதிவாளர் எல்.சுப்ரமணியன் இடமாற்றம் செய்யப்பட்டு, கனிமவள இயக்குநராக பணியமர்த்தப்படுகிறார். அவர்கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பொறுப்பையும் கவனிப்பார்.

வெளிநாட்டு பயிற்சியை முடித்துவிட்டு பணிக்கு திரும்பியுள்ள ஹர் சகாய் மீனா, பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மகப்பேறு விடுமுறையில் இருந்து, பணிக்கு திரும்பியுள்ளஜெ.இ.பத்மஜா பெரம்பலூர் சார்-ஆட்சியராக பணியமர்த்தப்பட்டுள்ளார். கல்வி விடுமுறையில் இருந்து, பணிக்கு திரும்பியுள்ள தாரேஸ் அகமது, தொழில் வழிகாட்டி நிறுவன செயல் இயக்கு நராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x