Published : 03 Nov 2020 03:12 AM
Last Updated : 03 Nov 2020 03:12 AM
மாவட்டங்களில் கரோனா தடுப்புநடவடிக்கை, ஆன்லைன் பட்டாவழங்கும் திட்டம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு காப்பீடு உள்ளிட்டவை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் கே.சண்முகம் நாளை (நவ.4) ஆலோசனை நடத்துகிறார்.
ஊரடங்கு நீட்டிப்பு
தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 9-வது கட்டமாக நவ.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக கடந்த அக்.28-ம் தேதி முதல்வர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.அதற்கு முன் கரோனா தடுப்புமற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக தலைமைச் செயலர் கே.சண்முகம், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.
பல்வேறு திட்டங்கள்
இந்நிலையில், நாளை (நவ.4)மாலை 3 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக தலைமைச் செயலர் ஆலோசனை நடத்துகிறார். அதில், கரோனா கட்டுப்பாடு, ஆக்கிரமிப்புகள் வரன்முறைப்படுத்துதல், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்காக அரசு அறிவித்த காப்பீடு திட்டம், கிராமப்புறம் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வீடு கட்டும் திட்டம், ஆன்லைன் பட்டா வழங்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இதற்கான, விவரங்களை சேகரித்து கூட்டத்தில் பங்கேற்கும்படி சென்னை தவிர மற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT