Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM

பத்ம விருதுக்கான பெயர்களை செப்டம்பர் 15 வரை பரிந்துரைக்கலாம் :

புதுடெல்லி

பத்ம விருதுகளுக்கான பரிந்துரையை வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரை அனுப்பலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கல்வி, அறிவியல், இலக்கியம், தொழில், விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் (பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ) வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளுக்கு தேர்வு செய்யப்படுவோரின் பெயர்கள் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் அறிவிக்கப்படும்.

அந்த வகையில், 2022-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்களின் பெயர்களை பரிந்துரைக்குமாறு மத்திய உள் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள், பரிந்துரைகள் ஆகியவற்றை https://padmaawards.gov.in என்ற அரசு இணையதளம் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். செப்டம்பர் 15-ம் தேதிக்குள் இவற்றை அனுப்பி வைக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x