Published : 05 Jun 2021 03:11 AM
Last Updated : 05 Jun 2021 03:11 AM

ஏர் இந்தியா நிறுவன பங்கு விற்பனை கரோனாவால் தாமதம் :

கரோனா தொற்று காரணமாக ஏர் இந்தியா பங்கு விற்பனை தாமதமாகியுள்ளது. 2021-ம்ஆண்டு இறுதிக்குள் விற்பனையை நிறைவு செய்ய முயற்சி எடுக்கப்படும் என்று விமான சேவை துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.

நிதி நெருக்கடியில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் அறிவிப்பை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு வெளியிட்டது. ஆனாலும் தொடர்ந்து அதன் விற்பனையில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன.

இந்நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்தது. இதனால் பங்கு விற்பனை தாமதமாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x