Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM

ராஜஸ்தான் அணி ரூ.7.5 கோடி கரோனா நிதி :

இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ரூ.7.5 கோடியை நிவாரண நிதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவில் கரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவும் நோக்கில் ரூ.7.5 கோடியை ராஜஸ்தான் ராயல்ஸ்அணி தனது பங்களிப்பாக வழங்குகிறது

வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள், அணி மேலாண்மை நிர்வாகிகள் முன்வந்து நிதியுதவி அளித்துள்ளார்கள். பிரிட்டிஷ் ஏசியன் டிரஸ்ட்டுடன் இணைந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அறக்கட்டளை இந்த உதவியை வழங்குகிறது. கரோனா பாதிப்பில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு உதவும் நோக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அறக்கட்டளையின் தலைவர் ரஞ்சித் பரத் தாக்கூர் தலைமையில் இந்த நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x