Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM
ஹைதராபாத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத வர்களுக்கு போலீஸார் நேற்று முதல் ரூ.2,000 அபராதம் விதித்து வருகின்றனர்.
தெலங்கானா தலைநகரான ஹைதராபாத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் ஆலோசனை நடத்தினர். இதில்கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்புடன் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் முகக் கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1,000 அபராதம் மற்றும் 1 மாத சிறை தண்டனை விதிக்க தீர்மானிக்கப்பட்டது. இதில் சிறை தண்டனையை தவிர்க்க விரும்புவோருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கவும் தீர்மானித்தனர். இதன்படி நேற்று முதல், முகக் கவசம்அணியாதவர்களிடம் அபராதமாக ரூ. 2 ஆயிரம் வசூலிக் கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT