Published : 13 Mar 2021 03:11 AM
Last Updated : 13 Mar 2021 03:11 AM
கல்யாண் ஜூவல்லர்ஸின் பொதுப் பங்கு வெளியீடு மார்ச் 16-ம் தேதிஆரம்பமாகிறது. ரூ.1,175 கோடிமதிப்பிலான பங்குகள் வெளி யிடப்பட உள்ளன. ஒரு பங்கின்விலை ரூ.86 முதல் ரூ.87 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய தங்க விற்பனை நிறுவனங்களில் ஒன்றான கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குச் சந்தையில் இடம்பிடிக்கும் நோக்கில் பொதுப் பங்கு வெளியிடுகிறது. ரூ.800 கோடி மதிப்பிலான புதிய பங்குகளும், ரூ.375கோடி மதிப்பிலான பங்குதாரர்களின் பங்குகளும் வெளியிடப்பட உள்ளன. மார்ச் 16 தேதி ஆரம்பமாகும் பொதுப் பங்கு வெளியீட்டில் மார்ச் 18-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். அதன் பங்குகள்பங்குச் சந்தையில் மார்ச் 26-ம்தேதி முதல் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவில் தங்க நுகர்வு கடந்த ஆண்டு குறைந்தது. ஆனால், இந்த ஆண்டு தங்க நுகர்வு அதிகரிக்கக்கூடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கல்யாண் ஜூவல்லர்ஸ் பங்குச் சந்தையில் இடம்பிடிக்க முடிவெடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT