Published : 12 Mar 2021 03:12 AM
Last Updated : 12 Mar 2021 03:12 AM

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை :

ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அனந்தநாக் மாவட்டத்தின் பிஜ்பெஹரா பகுதியில் உள்ள கண்டிபோராவில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை சுற்றிவளைத்தனர். இதையடுத்து பாதுகாப்பு படை யினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அப்பகுதியில் தீவிரவாதிகள் வேறு எவரேனும் உள்ளனரா என பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x