Published : 11 Mar 2021 03:12 AM
Last Updated : 11 Mar 2021 03:12 AM
திருமலையில் வேதகிரி எனும் பகுதியில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் வேதம் படித்து வருகின்றனர்.
சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருமலையிலேயே தங்கி வேதம் படித்து வருவதால், அவர்களுக்கு தங்கும் இடமும், உணவும் தேவஸ்தானம் வழங்கி வேதம் பயிற்றுவித்து வருகிறது.
இந்த மாணவர்களில் சிலருக்கு திடீரென சளி, காய்ச்சல், தலைவலி என வரத் தொடங்கியதால், இவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டது. அப்போது, இவர்களில் 50 மாணவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது திருப்பதி யில் பத்மாவதி தேவஸ்தான விடுதியில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT