Published : 03 Mar 2021 03:21 AM
Last Updated : 03 Mar 2021 03:21 AM
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியது.
தோஹாவில் நடைபெற்று வரும் கத்தார் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ஸ்லோவேனியாவின் ஆண்ட்ரேஜா கிளெபக் ஜோடி தங்களது முதல் சுற்றில் உக்ரைனின் நதியா கிச்செனோக், லுட்மிலா கிச்செனோக் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் சானியா ஜோடி 6-4 6-7, 10-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக சுமார் 12 மாதங்களுக்குப் பிறகு டென்னிஸ் களத்தில் இறங்கிய சானியா மிர்சா தனது பயணத்தை வெற்றியுடன் தொடங்கி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT