Published : 22 Feb 2021 03:16 AM
Last Updated : 22 Feb 2021 03:16 AM
குஜராத் மாநிலத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக நேற்று 81 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்சூரத் மாநகராட்சிக்கும் தேர்தல் நடந்தது.
இந்த மாநகராட்சியில் 116 வார்டுகள் உள்ளன. மொத்தம் 484 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 452 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வுசெய்து ஏடிஆர் என்ற தன்னார்வஅமைப்பு கூறியிருப்பதாவது:
சூரத் மாநகராட்சியில் மொத்தம்81 கோடீஸ்வரர்கள் போட்டியிடு கின்றனர். இதில் 50 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள். காங்கிரஸ் 13 , ஆம் ஆத்மி 12, தேசியவாத காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 4 பேரும் கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT