Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM

சென்செக்ஸ் 51,348 புள்ளிகளாக உயர்வு

வாரத்தின் தொடக்க நாளான நேற்று பங்குச் சந்தையில் மிகுந்த எழுச்சி காணப்பட்டது. வர்த்தகம் முடிவில் 617 புள்ளிகள் உயர்ந்ததில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் 51,348 புள்ளிகளானது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 191புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 15,115 புள்ளிகளானது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனப் பங்கு விலை அதிகபட்சமாக 7.4 சதவீதம் உயர்ந்தது.பஜாஜ் பைனான்ஸ், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெல் பங்கு விலைகளும் உயர்ந்தன. தேசிய உலோக நிறுவனங்களின் பங்கு விலை 3 சதவீதம் உயர்ந்தது. பொதுத்துறை வங்கிப் பங்குகள் மட்டும் சரிவைச் சந்தித்தன.

பங்குச் சந்தையில் பட்டிய லிடப்பட்டிருந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 202.84 லட்சம் கோடியாக உயர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x