Published : 01 Feb 2021 03:12 AM
Last Updated : 01 Feb 2021 03:12 AM

திரையரங்குகளில் இன்று முதல் 100% அனுமதி

கரோனா பரவல் பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு மார்ச்மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னர் படிப்படியான தளர்வுகளுடன் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல் பட அனுமதிக்கப்பட்டது.

தற்போது திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் முழு அளவில் செயல்படலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 27-ம் தேதிஉத்தரவு பிறப்பித்தது.

இது தொடர்பான நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களில், திரைப்படங்களைதிரையிடுவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது, திரையரங்குக்கு வெளியே, பொது இடங்கள், காத்திருப்பு பகுதிகளில் 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற பொதுவான வழிகாட்டு தல்களை பின்பற்றப்பட வேண்டும். ஒவ்வொரு காட்சிக்கு இடையேயும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x