Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

பெண்கள் நடத்தும் மார்க்கெட்டை மூடியதால் மணிப்பூரில் ரூ.3,879 கோடி வருவாய் இழப்பு

மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பாலில் நுபி கெய்தல் என்ற பெயரிலான மார்க்கெட் இயங்கி வருகிறது. ஆசியக் கண்டத்திலேயே பெண்களால் நடத்தும் மிகப்பெரிய மார்க்கெட்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த மார்க்கெட் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி கரோனா வைரஸ் பரவும் பிரச்சினை காரணமாக மூடப்பட்டது. தற்போது வரை அந்த மார்க்கெட் திறக்கப்படவில்லை.

ஜனவரி 19-ம் தேதியுடன் மொத்தம் 304 நாட்கள் இந்த மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால் அங்கு ரூ.3,879 கோடி வரை வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர் செர்ட்டோ தோன்டானா கோம் தெரிவித்துள்ளார்.

இங்கு 50,435 தொழிலாளர்கள் விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 4,06,755 பேர் விவசாயம் அல்லாத வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். 1,51,330 பேர் சில்லரை வியாபாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் 52,966 பேர் பெண்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x