Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM
நேரடி அந்நிய முதலீடுகளை (எப்டிஐ) ஈர்ப்பதற்காக விதிகளை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அண்டை நாடுகளில் இருந்து முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக மத்திய அரசு சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.
ஏப்ரல் 17-ம் தேதியிட்ட அறிவிக்கையில், ‘‘இந்தியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறித்து அரசிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி பல்வேறு சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக அண்டை நாடுகளில் இருந்து நேரடி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான விதிமுறைகள் மேலும் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT