Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

பஞ்சமி தீர்த்தம்பக்தர்களுக்குஅனுமதி இல்லை

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நாளை பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவடைகிறது,

வழக்கமாக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடக்கும் பஞ்சமி தீர்த்தவாரியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடுவது வழக்கம்.

இந்த முறை கரோனா பரவலை தடுக்கும் விதமாக தாயாரின் பிரம்மோற்சவ விழா ஏகாந்தமாக திருவீதி உலா இன்றி நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சியும் கோயிலுக்கு உள்ளேயே ஏகாந்தமாக நடத்தப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அர்ச்சகர்கள் தேவஸ்தான அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x