Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM
இந்திய வங்கிகளின் 73-வதுபொதுக் கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் கூறியதாவது:
நாட்டு மக்கள் அனைவரையும் வங்கி சேவையுடன் இணைக்கும் நடவடிக்கை இன்னும் முழுமையடையவில்லை. வரும் 2021 மார்ச் 31-ம் தேதிக்குள் எல்லா வங்கி கணக்குகளிலும் ஆதார் எண்இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அதேபோல் பான் எண் தேவைப்படும் அத்தனை செயல்பாடுகளுக்கும் பான் எண்ணை குறிப்பிடுவது அவசியம்.
வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் ரொக்கப் பரிவர்த்தனைகளை தவிர்க்கவும் டிஜிட்டல் முறையிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். யுபிஐ பரிவர்த்தனை முறை நம்முடைய அனைத்து வங்கிகளின் பொது பரிவர்த்தனை முறையாக இருக்க வேண்டும். மேலும் வங்கிகள் ரூபே கார்டுகளை ஊக்குவிக்க வேண்டும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT